
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோட்டத்துக்குச் சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாகச் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
