
உரிமையாளர்கள் இல்லாத சுமார் 18 வாகனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் உரிமையாளர்கள் இல்லாத விடயம் தெரிய வந்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் ஏனைய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் இந்த வாகனங்கள் தொடர்பிலான விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
