பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய சில அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவார்கள் என தகவல்

பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்குமிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பகமான அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சக்தி வாய்ந்த அரசியல்வாதி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதி நிதித்துவப்படுத்தும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலா வாரியத்திற்குள் தவறான நடத்தைகளில் ஈடுபட்ட பல தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவை நாட்டின் செல்வத்தை சுரண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றன.
இந்த வழக்குகளில் போர் விமான பரிவர்த்தனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய பத்திர பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் அடங்கும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஒரு முக்கிய அரசியல்வாதியின் மனைவி மீது நடத்தப்பட்ட விசாரணைகள் நடைமுறை குறைபாடுகள் காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன.
இந்த விசாரணைகள் முறையாக முடிவடைந்தவுடன், அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்டம் உடனடியாகவும் முறையாகவும் செயல்படுத்தப்படும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
