இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித் துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு 38 வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகு, அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும்,
தவறான செலவு அறிக்கைகள் இருந்தால், சரிபார்க்கக் கூடிய ஆவணங்களுடன் பொலிஸில் யார் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் ஒருவருக்குச் செலவிடும் தொகை 109 ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 17,140,354 வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பிரசாரச் செலவுக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு 186 கோடி ரூபாய்.
அந்த தொகையில் 60 சதவீதம் அதாவது 112 கோடி ரூபாயை வேட்பாளரால் பிரசாரச் செலவுகளாகவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பிரசாரச் செல வாகச் செலவிடக்கூடிய தொகை 40 வீதமாகவும் இருக்குமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
