அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனம் இலங்கையில் கால்பதிக்கிறது

2 years ago

அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலிய நிறுவனம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக ஜூலை மாத இறுதி அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் தமது நாட்டுக்கு அடுத்தபடியாக சில்லறை பெட்ரோலிய விநியோக செயற்பாடுகளை விரிவுபடுத்தும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது