ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிக்கு ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு.
10 months ago

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும்போது ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் படவுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
பொலிஸ் தேர்தல் பணிமனை இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆயுதம் தரித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இந்த வாகனங்களின் முன்னாலும் பின்னாலும் பொலிஸ் வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
