யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐவர் கைது.

2 years ago


யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றையதினம் (20.08.2024) குறி்த்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அத்துடன், மணல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஐந்து டிப்பர் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அண்மைய நாட்களாக தென்மராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பல டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்