யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..

2 years ago


சர்வதேச வலிந்து காணாமல் ஆக் கப்பட்டோர் தினமான இன்று யாழ்ப் பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன் னால் காணாமல் ஆக்கப்பட்ட உறவு களுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களைக் கறுப்புத் துணியால் கட்டி பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்