
யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உயிருடன் ஆமை ஒன்றினை மீட்டுள்ளனர்.
அத்துடன் 20 கிலோ ஆமை இறைச்சியையும் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து அங்கிருந்த 57 வயதுடைய நபரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
