

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியின் கீழ் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
12 பேர் கொண்ட ஊழியர்கள் குழுவில் இலங்கையர்களும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
