புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது பாராளுமன்ற தேர்தலின் ஊடாகவே அரசாங்கம் அமைக்கப்படும்.
இந்நிலையில், எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.
அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துகளுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.
அந்த வகையில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. அந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
