தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசிய கட்சி எம்.பிக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக எம்.பி கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட உத்தேசித்திருக்கிறேன்.
எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி அச்சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவுள்ளேன் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங் காலத்தில் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அன்றைய தினம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகத் தெரிவித்தார்.
அதனூடாக தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அத்தீர்வுத்திட்ட வரைவு குறித்து ஆழமாக ஆராயவும், கலந்துரையாடவும் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
