யாழ்.ஊர்காவற்றுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து வாள்கள் உட்பட ஏழு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
8 months ago

யாழ்.ஊர்காவற்றுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து வாள்கள் உட்பட ஏழு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட வில்லை என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று நடத்தப்பட்ட சோதனையிலேயே வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், தலைமறைவான நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
