பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு வவுனியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
8 months ago

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு வவுனியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
காலை 8.30 மணி தொடக்கம் வவுனியா மாவட்ட செயலகம்,உதவி தேர்தல் ஆணையாளர் பணிமனை மற்றும் பொலிஸ் நிலையங்களில் அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்கை செலுத்தினர்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வவுனியா தொகுதியில் 5 ஆயிரத்து 924 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று நாடு முழுவதும் ஆரம்பமானது.
நாளை வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்த மூன்று நாட்களிலும் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் நவம்பர் 7, 8ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
