வவுனியா, பூவரசங்குளம் குருக்கல் புதுக்குளம் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
9 months ago

வவுனியா, பூவரசங்குளம் குருக்கல் புதுக்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.
வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.
இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கல் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
