யாழ்.நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் முன்னிலையாகத் தயார் என கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு
8 months ago

லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் முன்னிலையாக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று(22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
