மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

1 year ago



மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய ரூக்கரிசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய நாட்டில் இருந்து இலங்கைக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்ட மேற்படி நபர் சம்பவ தினமான இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடியபோது கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.