
ஒக்ரோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்து மத கலாசாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும், அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் பெரும்பாலும் ஒக்ரோபர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர் சார்ல்டன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பன்முக கலாசாரத்துக்கு அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் விதமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய நாட்டின் சமூக கட்டமைப்பு ரீதியாக இந்துக்களின் பங்களிப்பையும் இது அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் பழமை வாய்ந்த இந்து மத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்துக்கு அவுஸ்திரேலியா மதிப்பளிக்கிறது. இது உலக அரங்கில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
