தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை தடுத்து நிறுத்தவும்.-- எம்.பி மனோகணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்கள், தோட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை நிர்வாகத்தால் வெளியேற்றக் கூடாது என்பதையும், புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“மொடர்ன் ஸ்லேவரி” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் எனவும் அழுத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தோட்டங்களில் வாழும் மக்கள், எக்காரணம் கொண்டும், தோட்ட நிர்வாகிகளால் வெளியேற்றப்படக்கூடாது என்ற அவசர தடை பணிப்புரையைத் தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
