யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 months ago


யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு, மகேந்திரா வானின் கண்ணாடிகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது வீட் டின் மீதே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
