விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களுடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தால். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.-- பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவிப்பு
7 months ago

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியான புலிக்கொடி மற்றும் புலிகள் அமைப்புக்குரிய சின்னங்களுடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தால், உரிய விசாரணைகளின் பின்னர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர் பில்ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி விக்கையில்,
"புலிகள் அமைப்பின் கொடி மற்றும் அடையாளங்களுடன் நினைவேந்தல் நடத்த முடியாது.
சட்டத்தில் அதற்கு இடமில்லை.
அவ்வாறு நடந்திருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடமில்லை."-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
