
கனடாவின் பீல் பிராந்தியத்தில் அதிகளவு சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிராந்தியத்தில் ஒவ்வொரு 36 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையும் ஆயுதமொன்று மீட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் 205 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரையில் ஒரு ஆண்டில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சட்டவிரோத ஆயுதங்கள் இந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் சுமார் 60 ஆயுதங்கள் கூடுதலாக கைப்பற்றப்பட்டுள்ளன என பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
பீல் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் சுமார் 147 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் இது கடந்த ஆண்டை விடவும் 70 வீத அதிகரிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
