

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள், கிளிநொச்சி - கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் கடற்றொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது, இன்று (26.07.2024) பிற்பகல் 1:30 மணியளவில் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று தட்டுவன்கொட்டி, நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இந்த அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் குறித்த அரசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
