பிளாஸ்ரிக், காகிதம், கண்ணாடி, உலோகம் போன்ற கண்ணுக்குத் தெரியாத இரசாயனங்கள் உடலில் கலந்து வருவது தெரியவந்துள்ளது.

1 year ago


பிளாஸ்ரிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள இரசாயனங்கள் உணவுப் பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது.

இது குறித்து சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் உள்ள உணவுப் பொதிகள் கூட்டமைப்பு அறக் கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி தெரிவித்தவை வருமாறு,

“உணவுடன் தொடர்புடைய      இரசாயனங்களில் 100 வகை இரசாயனங்கள் மனித ஆரோக்கியத் துக்கு மிகவும் ஆபத்தானவையாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒட்டாமல் சமைக்க உதவும் பாத்திரங்களில் பூசப்படும் பி.எப். ஏ. நுண்பொருட் கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை பொட்டலம் போடத் தயாரிக்கப்படும் பிளாஸ்ரிக் குடுவைகளில் உள்ள பிஸ்பெனால் ஏ உள்ளிட்டவை மனித உடலில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் உணவை  உட்கொள்ளும்போது நம் உடலில் வேறு பல இரசாயனங்கள் கலக் கின்றன.

இந்த கோணத்தில் ஆராய்ந்த போதுதான் 3,601 விதமான இரசாயனங்கள் உணவு வழியாக மனித உடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது”- என்றார்.



அண்மைய பதிவுகள்