கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்

1 year ago



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி நேற்றுக் காலை திணைக்களத்தில் முன்னிலையாகினார்.

இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.