
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்த இளைஞன் தனது தாயுடன் வசித்து வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தாய் வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய போது இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள 15 அடி ஆழமுடைய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்துப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
