கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானசாலைகளை மூடுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுப்பு
6 months ago







கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளை உடனடியாக மூடுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட பதில் அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு மறுவாழ்வு அமைப்பு மற்றும் மது போதைக்கு எதிரான இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
