


யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து நேற்று(18) சனிக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த குளத்துக்கு அருகிலிருந்து இவரது சைக்கிள் மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
