இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்-இவ்வாறு மன்னார் மருதமடு தேவாலயத்தின் நூற்றாண்டு திருவிழாவில் கலந்துகொண்ட போது கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் .
இனங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தி முரண்பாடு களை உண்டாக்கியவாறு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கொள்கை, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேலும் வலுவடைந்தது. இன, மத பேதங்களை உண்டாக்கியதுடன், நாட்டைத் துண்டாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த அரசியல்வா திகளே இவ்வாறான கொள்கைகளைக் கொண்டு சென்றதுடன் தொடர்ந்தும் கொண்டு செல்கின்றனர்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படும் தற்போதைய நாட்களில் தமிழ் மக்கள் தங்களது அடையாளத்தை வலுப்படுத் துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
