முல்லைத்தீவில் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளத்தில் மக்கள் மீள்குடியேற அழுத்தம் பிரயோகிக்கப்படும் எம்.பி து.ரவிகரன் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமெனவும், அதற்காக உரிய தரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
தமிழர்களின் பூர்வீக வழி பாட்டிடமான முல்லைத்தீவு -தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் ரவிகரன் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது, தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குருந்தூர்மலையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தின் இடையூறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குருந்தூர்க் குளத்தின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் ரவிகரன் எம். பி. அவதானம் செலுத்தினார்.
1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணி முறிப்பில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவக்கெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆண்டான் குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்களை 40 வருடங்களாகியும் இதுவரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
