மினுவாங்கடையில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 40 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்குப் பணத்தை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகப் பணம் கொண்டு செல்லும் நிறுவனத்தின் சாரதி ஒருவர் 7.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைத் திருடி, அதே வாகனத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் கம்பஹா - உக்கல்கொட பகுதியில் வாகனத்தை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு மற்றுமொருவருடன் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பணத்தில் 3 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதாகியிருந்தார்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
