இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.











இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.
விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று (19) போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ்தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர்.
இரு தரப்பும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கட்டார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில், பிணைக் கைதிகள் பட்டியலை ஹமாஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்று மதியம் 2.45 மணி முதல் காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதையடுத்து, எஞ்சியுள்ள 98 இஸ்ரேல் பிணைக் கைதிகள் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்பட உள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
