யாழ்.வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு பாரதி வீதி என பெயர்சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.







யாழ்.வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது.
விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், வீதி திறந்து வைப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.
யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மதகுருமார், வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார், வலிமேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் திரு.சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் கௌரவ பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
