கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14,15ஆம் திகதிகளில் இடம்பெறும்
5 months ago

கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது
2025ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவை இம்முறை மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டப் பதில் செயலாளரின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கைக் கடற்படை, நெடுந்தீவுப் பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் திருவிழாவை மேற்கொள்ள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
