பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்ரோபர் 30, நவம்பர் 01, 04ஆம் திகதிகளில் நடைபெறும். தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்ரோபர் 30, நவம்பர் 01, 04ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த நாட்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் நவம்பர் 7, 8ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல்பணிகளில் ஈடுபடுவோர் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
இதன்படி, மாவட்ட செயலக பணிமனைகள், தேர்தல் ஆணைக்குழு பணிமனைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய பணிமனைகளில் பணிபுரிபவர்கள் ஒக்ரோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
மேலும், அரச பணிமனைகள் மற்றும் இராணுவ முகாம்களில் பணிபுரிபவர்கள் நவம்பர் 1, நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப் புக்காக வழங்கப்பட்டுள்ள திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் நவம்பர் 7, 8ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
