இலங்கையில் யானை வேலிகள் அமைக்கும் நடவடிக்கை 80 சதவீதம் நிறைவு.-- வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிப்பு

1 year ago



நாடளாவிய ரீதியில் வனப்பாதுகாப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளன என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 5 ஆயிரத்து 500 கிலோமீற்றர் உள்ளடங்கும் வகையில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், 1,500 கிலோமீற்றர் நீளமான யானை வேலியை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

யானை வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் அவற்றை பராமரிப்பதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

அத்துடன், சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளை அமைத்துள்ளவர்களை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்    எடுக்கப்படவுள்ளது என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அண்மைய பதிவுகள்