கிளிநொச்சி பகுதியில் வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காயம்
9 months ago

கிளிநொச்சி பகுதியில் வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காயம்
கிளிநொச்சியில் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருளை இழுத்து எடுத்தபோது, அது வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
கிளிநொச்சி - பளை - அரசங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியமளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞரே படுகாயம டைந்தார்.
அந்தப் பகுதியில் தனக்கு சொந்தமான வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவரே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தார்.
இதில், படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின் றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
