நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது

1 year ago


நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் மொரட்டுவை, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.

மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.