யாழ்.பருத்தித்துறையில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
7 months ago

கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமாள்புரம், வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று (05) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
