மன்னார் நீதிமன்றத்தில் வைத்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கைது

மன்னார் நீதிமன்றத்தில் வைத்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் நேற்றைய தினம் (06) மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிவான் முன்னிலையில் முன்னிலையானார்.
அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை வவுனியா சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதிவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார்.
சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதிமன்றத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பெண் ஒருவரிடம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரைப் பார்வையிடுவதற்காக 1000 ரூபா பணத்தைப் பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அந்தச் சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில், சிறைச்சாலை அலுவலரை நீதிவான் நீதிமன்றில் வைத்துக் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த சிறைச்சாலை அலுவலரை எதிர்வரும் 8 ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
