சேறு பூசும் சுவரொட்டிகளுடன் ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துக, கொழும்பு நீதவான் புலனாய்வினருக்கு உத்தரவு

சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் ஒருவரை கைது செய்தனர்.
இந்த சுவரொட்டிகளை ஒட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கூறினார் என, அவர், பொலிஸாருக்கு வாக்குமூலமளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ரங்காவை கைது செய்ய கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸார் ரங்காவின் வீட்டுக்கு சென்றபோதும் அங்கு அவர் இருக்கவில்லை.
இதனால், உடனடியாக அவரை தேடிக் கண்டுபிடித்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
