




மட்டக்களப்பு காரைதீவிலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் செல்லும் 33 கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் அருளானந்தம் வரதராசன் தனது பெற்றோர் சார்பில் ஸ்தாபித்த அமைப்பின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலானந்த கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக சம்மாந்துறை ஆதார மருத்துவமனை சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் நடேசன் அகிலன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் கோ. அருணன், காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ. பார்த்தீபன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
