
அரசியல்வாதிகள், தனிநபர்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துகளை கைப்பற்றுவதற்காக புதிதாக ஓர் அமைப்பை அரசாங்கம் நிறுவவுள்ளதாக அறிய வருகிறது.
அரசியல்வாதிகள், தனிநபர்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துகள் தொடர்பில் தகவல் சேகரிக்கவும் அந்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று அரச உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அமைப்பு 'சொத்து மீட்பு' அமைப்பு என்று அழைக்கப்படும்.
உலகின் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இதுபோன்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் பணமோசடி மற்றும் பிற சொத்துகளில் இருந்து பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தை கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் ஏற்கனவே இரகசிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
