6000 இறந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது - கோபா குழுவில் தெரியவந்துள்ளது
1 year ago
கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
துணை கணக்காய்வாளர் ஜெனரல் எம்.எஸ். நயனகுமார இந்தத் தகவலை குழுவில் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் தவறான செயற்பாடுகளால் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
முப்படையினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
இறந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை செலவுகளும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 6,400 சட்டவிரோத ஓய்வூதியங்கள் பதிவாகியுள்ளன என்றும் கோபா குழு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
