இத்தாலி கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

1 year ago


இத்தாலி கடற்படைக்குச் சொந்தமான 'PPA MONTECUCCOLI' கப்பல் இன்று வியாழக்கிழமை (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

143 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 152 பணியாளர்கள் கடமை புரிகின்றனர்.

கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி அலெசாண்ட்ரோ ட்ரோயா ஆவார்.

கப்பலானது எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து மீண்டும் புறப்படவுள்ளது.

அண்மைய பதிவுகள்