இலங்கை மின்சார சபையில் பொருளாதாரக் கொலையாளிகளை ஜனாதிபதி நீக்க வேண்டும்.-- மின்சார பாவனையாளர் சங்கம் கோரிக்கை
6 months ago

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதாரக் கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மின்சார பாவனையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அந்தச் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
அதிக இலாபத்தை ஈட்டியுள்ள மின்சார சபையால் சுமார் 40 வீதமாக சலுகைகளை பாவனையாளர்களுக்கு வழங்கமுடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
தற்போது இலங்கை மின்சார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர். இவ்வாறான பொருளாதாரக் கொலையாளிகளைக் கண்டறிந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
