இலங்கை அரசு விதித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது.-- வியாபாரிகள் குற்றம் சுமத்தல்

இலங்கை அரசாங்கம் விதித்துள்ள புதிய அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அரிசிக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நிர்ணயித்தது.
இதன்படி, சந்தையில் நாடு, சம்பா மற்றும் சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கீரி சம்பாவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 225 ரூபாவாகவும் சில்லறை விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 215 ரூபாவாகவும் சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டதுடன் சம்பா அரிசியின் மொத்த விலை 235 ரூபாவாகவும் சில்லறை விலை 240 ரூபாவாவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் கீறி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 255 ரூபாவாகவும் சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதேவேளை, சந்தையில் இன்னும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புதிய அதிகபட்ச சில்லறை விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது எனவும் வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
