
எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 606 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாவட்ட செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தின் 3 தேர்தல் தொகுதிகளான கல்குடா தொகுதியில் இருந்து ஒரு இட்சத்து 34 ஆயிரத்து 104 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 2 இலட்சத்து 10 ஆயிரத்து 293 பேரும் பட்டிருப்பு தொகுதியில் இருந்து ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 289 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
