
கனடிய தபால் நிறுவனம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்கத் தீர்மானித்துள்ளது.
தற்காலிக அடிப்படையில் அவர்கள் இவ்வாறு பணி நீக்கப்பட உள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக கனடிய தபால் நிறுவன பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 55,000 பணியாளர்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படுவதாக கனடிய தபால் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் பணிகள் முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன எனவும் இதனால் பணியாளர்கள் பணி நீக்கப்படுகின்றனர் எனவும் அது அறிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பணி நீக்கத் தீர்மானம் எவ்வாறானது என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
