சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலின் பிரசார கூட்டத்துக்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது.

நாமலின் பிரசார கூட்டத்துக்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் வெலிமடை நகரிலுள்ள இந்திராணி திரையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் பாதுகாப்புக்காக சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அழைக்கப்பட் டிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, உவபரணகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு மண்டபத்துக்குள் நுழைய முற்பட்ட போது, அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் பண்டாரவளை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டனர்.
இளைஞர்களிடம் பிளாஸ்ரிக் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பகஸ்தேவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.
கூட்ட அரங்கில் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்குக்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என வெலிமடை பொலிஸார் கூறினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
